நடிகர் சந்தானத்தின் உறவினர் கார் ஏற்றிக் கொலை

சனி, 22 மே 2021 (23:22 IST)
திருவாரூரில் பணியாற்றி வந்த நடிகர் சந்தானத்தின் உறவினர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூரில் உள்ள கிடாரங்க் கொண்டான் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபாரதி. இவர் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார்.  இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டில் தனியாக வசித்து வந்த ஜெயபாரதி தபால் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தனது டூவீலரில் சென்ற போது ஏடிம் நிரப்பச் செல்லும் வாகனம் மோதியலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்