சத்குருவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு !

சனி, 27 பிப்ரவரி 2021 (16:12 IST)
தமிழகக்கோயில்களைப் பாதுகாக்க அவற்றைப் பக்தர்களிடமே தமிழக அரசு வழங்க வேண்டுமென ஈஷா அறக்கட்டளை நிறுவனம் சத்குரு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டுவீட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்திற்கு அவர் டேக் செய்திருந்தார்.

மேலும் ஒரு வெளியிட்டுள்ள அவர், அதில், கோயில் என்பது தமிழர்களுக்கு ஆன்மா போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது வருத்த மாகவுள்ளது எனத் தெரிவித்தார்.

இதற்கு ஆதரவு அளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில். சத்குரு கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பல கோவில்களில் ஒரு பூஜை கூட நடப்பதில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Completely agree with @sadhguruJV. Leave it for devotees. Sad to see so many places of worship without a single pooja taking place. Very little done for maintenance,security etc. #FreeTNTemples

— Santhanam (@iamsanthanam) February 27, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்