பசியில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்த ஆரி - வைரலாகும் வீடியோ!

சனி, 12 ஜூன் 2021 (12:56 IST)
நடிகர் ஆரி தமிழில்  2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை , மாயா, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நாகேஷ் திரையரங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
ஓரளவுக்கு கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டாலும் இவர் பெரும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். இந்நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டில் வென்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களை தேடி சென்று உணவு வழங்கியுள்ளார் ஆரி. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்