முத்தக்காட்சியில் நடிப்பது ஒன்னும் தவறில்லையே: சொல்கிறார் இந்த நடிகை!

ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (19:18 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை ஜனனி. இவர் இந்த தொடரில் முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


 
 
சினிமாக்களில் முத்தக்காட்சிகள் பார்த்திருப்போம், ஆனால் சீரியல்களில் முத்தக்காட்சிகள் இடம்பெறுவதில்லை. இதனால் ஜனனி சீரியலில் முத்தக்காட்சிகளில் நடித்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இது குறித்து பேசிய ஜனனி முத்தக்காட்சிகளில் நடிப்பது ஒன்றும் தவறில்லையே என்கிறார். என்னை சந்திக்கும் நேயர்கள் சிலர், முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்காகவே அப்படியெல்லாம் நான் நடிக்கிறேன். இது எனக்கு தவறாக தோன்றவில்லை. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 
உடையை பார்த்து ஒரு பெண்ணை மதிப்பிட்டால் அவங்க தவறானவங்களாகத்தான் இருப்பாங்க. என்னிடம் யாருமே தவறாக நடந்துக்க முடியாது. நான் சரியாக இருப்பேன். முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு மார்டன் கேர்ள் மாதிரியான கதாப்பாத்திரம் என்னுடையது. எனவே எனக்கு இது தவறாக தெரியவில்லை. அந்த கதாப்பாத்திரமாக நான் மாறியிருக்கிறேன் அவ்வளவுதான் என்றார் ஜனனி.

வெப்துனியாவைப் படிக்கவும்