செல்போன் டவரில் ஏறி போராடிய இளைஞரின் கோரிக்கை ஏற்பு....

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (23:08 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி போராடி வந்தவரின் கோரிக்கையை ஏற்றுள்ளது அரசு.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை நிரப்படாமல் இருந்த சுமார் 6,635 காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அம்மாநிலத்தைச் சேர்ந்த சுரிந்தர் சிங் என்ர பட்டதாரி இளைஞர் தொடர்ந்து 135 நாட்கல் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தி வந்தார்.

தனி ஒருவனாக போராட்டம் நடத்தி வந்த அவரது கோரிக்கையை அம்மாநில  அரசு ஏற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறியுள்ளது. அந்த இளைஞருக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்