யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் - இவ்ளோவ் பெரிய தப்பு பண்ணிட்டு தப்பிக்கலாமா!

வியாழன், 23 மார்ச் 2023 (14:07 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இவர் கடந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் அவுட்டிங் சென்றுள்ளர். அப்போது வேகமாக சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.இதையடுத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் யாஷிகா ஆஜராகாத நிலையில் தற்போது அவர் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஒரு உயிரை கொன்றுவிட்டது மட்டுமல்லாது சட்டத்திற்கு மதிக்காமல் இருப்பதை நெட்டிசன்ஸ்  விமர்சித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்