33 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ் சினிமாவின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் ‘கரகாட்டகாரன்’

வியாழன், 16 ஜூன் 2022 (15:05 IST)
கரகாட்ட காரன் திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தமிழ் வணிகா சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. 1989 –ல் வெளியான இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது. இன்று இந்த திரைப்படம் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

வெளியாகி 33 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இருப்பதாக கடந்த ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.. இது சம்மந்தமாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இரண்டாம் பாகத்தில் இருப்பார்களா என்ற கேள்விக்கு ‘ அவர்கள் இல்லாமல் எப்படி ?’ எனப் பதிலளித்துள்ளார்.

இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் இன்று சமூகவலைதளங்களில் பலரும் கரகாட்டகாரன் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்