தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக ஹாரருக்கு மாறி வருகிறது. யாமிருக்க பயமே வெற்றிக்குப் பிறகு கோடம்பாக்க கதை விவாதங்களில் ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்காமல் ஒரு பேய்ல என்றுதான் விவாதிக்கிறார்கள். காமெடி படம் எடுத்துக் கொண்டிருந்த சுந்தர். சி-யே அரண்மனை என்ற பெயரில் ஹாரர் படம்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் இன்னொரு ஹாரர் படம் ஆ.
ஓர் இரவு, அம்புலி 3டி படங்களை இயக்கிய ஹரி சங்கர், ஹரீஷ் நாராயண் இருவரும்தான் இந்த ஆ வை இயக்கியுள்ளனர். இதன் கதை ஐந்து இடங்களில் நடக்கிறது. டோக்கியோ, துபாய், ஆந்திராவிலுள்ள நெடுஞ்சாலை மற்றும் ஒரு ஏடிஎம் சென்டர்.
கதை நடக்கும் இடங்களே இது மற்ற ஹாரர் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்பதை உணர்த்திவிடுகின்றன. கோகுல்நாத், சிம்ஹா, பாலா, மேக்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.