வில்லனாக மாறிய ஷங்கரின் ஹீரோ

திங்கள், 16 ஜூன் 2014 (15:15 IST)
பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட மணிகண்டன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்.
 
பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன், ஜெனிலியா ஆகியோரை அறிமுகப்படுத்தினார் ஷங்கர். சித்தார்த், பரத், நகுல் மூவரும் பிஸியான நடிகர்களாக உள்ளனர். ஜெனிலியா இந்திவரைக்கும் சென்று வெற்றிகரமான நடிகையாக தன்னை ஸ்தாபித்தார். தமன் தெலுங்கு, தமிழின் பிஸியான இசையமைப்பாளர். இவர்களில் மணிகண்டனின் உலகம் மட்டும் இன்னும் திரிசங்கு சொர்க்கமாக உள்ளது.
பாய்ஸ் படத்துக்குப் பிறகு ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்த மணிகண்டன் சமீபமாக எந்தப் படத்திலும் இல்லை. ஹீரோ வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது அவருக்கே சந்தேகம். அதனால் துணிந்து வில்லனாகியிருக்கிறhர்.
 
சுகந்தன் இயக்கும் காதல் 2014 படத்தில் மணிகண்டன்தான் வில்லன். கோரிப்பாளையம், மாத்தியோசி படங்களில் நடித்த ஹஷ் ஹீரோ. நேகா என்ற புதுமுகம் ஹீரோயின். இந்த காலகட்டத்து காதல் எப்படியிருக்கிறது என்பதுதான் படத்தின் கரு. இந்த காலத்து காதலின் வில்லனாக மணிகண்டன்.
 
இந்த புதிய முயற்சியாவது மணிகண்டனை பிஸியாக மாற்றுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்