நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயர் இருப்பதால் நல்ல கேரக்டருக்கு அஞ்சலியை விரும்பி அழைக்கிறார்கள்.
விஜய்யின் தெய்வமகன் படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். இந்த இருவரில் ஒருவராக தேர்வாகியுள்ளார் அஞ்சலி. இன்னொருவர் அமலா பாலாக இருக்கலாம் என்கிறார்கள்.
முருகதாஸ் தயாரீக்கும் படத்திலும் இவர்கள் இருவரும்தான் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்பதும் அமலா பால் அந்தப் படத்திலிருந்து திடீரென விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.