இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் புதிய படம் வணங்காமுடியில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதில் அரவிந்த்சாமிக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடம். செல்வா சொன்ன கதையும், ஹீரோ கதாபாத்திரமும் பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன் செல்வாவின் இயக்கத்தில் புதையல் படத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.