ரஜினி பேச்சும் பிரபாகரனும்

முப்பது வருஷமா போர் தொடுத்தும் அவங்களை (புலிகளை) ஒண்ணும் செய்ய முடியலைன்னா தோல்வியை ஒத்துக்கங்க... என்று நடிகர் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினியின் இந்தப் பேச்சை பிரபாகரன் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

புலிகள் ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பிரபாகரனை சந்தித்தப்பின் பிரபாகரன் சொன்னதாக அவர்கள் கூறிய கருத்துக்கள் இலங்கை பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.

முப்படைகள் முப்பது வருடங்களாக போர் தொடுத்தும் எம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது, எமது மண்ணிர் யதார்த்த நிலையை உணர்த்துவதாக உள்ளது என்று ரஜினியின் பேச்சை ஆமோதித்து கருத்து தெரிவித்துள்ளார் பிரபாகரன்.

சென்னையின் செய்திகள் உடனுக்குடன் பிரபாகரன் செவிகளுக்கு சென்றடைவதற்கு இதுவே சாட்சி. உண்ணாவிரதத்தால் என்ன பயன் என்று இனி யாரும் கேட்க முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்