சூர்யா தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ள இப்படத்தைத் தொடர்ந்து ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். அவருடன் நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படத்துக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். படத்தை தயாரிப்பது தெலுங்கு தயாரிப்பாளர் புஜ்ஜி. முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் சூர்யா நடிக்கயிருப்பதை புஜ்ஜி உறுதி செய்துள்ளார்.