மீண்டும் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா

வியாழன், 31 ஜூலை 2014 (13:05 IST)
ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்ஙதிரன் இயக்கும் முதல் படம் யான். ஜீவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் முடிந்ததும் மீண்டும் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார்.
யான் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இதையடுத்து ஈரோப்பாவில் சில பாடல் காட்சிகளை படமாக்குகின்றனர். ஏற்கனவே டாக்கி போர்ஷன் முடிந்துவிட்டதால் பாடல் காட்சிகளோடு போஸ்ட் புரொடக்ஷனுக்கு படம் தயாராகிவிடும். எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் யானை தயாரிக்கிறது.
 
யான் தவிர வேறு எந்தப் படமும் தற்போது ஜீவா கைவசம் இல்லை. யானுக்குப் பிறகு மீண்டும் ரவி.கே.சந்திரன் இயக்கத்திலேயே அவர் நடிக்க உள்ளார். பரஸ்பரம் இருவரின் திறமையும், வேலையும் பிடித்துப் போனதால் இந்த காம்பினேஷன் அப்படியே தொடர்கிறது. ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
 
விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்