யான் தவிர வேறு எந்தப் படமும் தற்போது ஜீவா கைவசம் இல்லை. யானுக்குப் பிறகு மீண்டும் ரவி.கே.சந்திரன் இயக்கத்திலேயே அவர் நடிக்க உள்ளார். பரஸ்பரம் இருவரின் திறமையும், வேலையும் பிடித்துப் போனதால் இந்த காம்பினேஷன் அப்படியே தொடர்கிறது. ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.