மானாடியது... சாந்தனுவும் ஆடினார்

புதன், 24 ஜூலை 2013 (17:31 IST)
FILE
நடிகர் சாந்தனுவும், மானாட மயிலாட நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியும் காதலிக்கிறார்கள். விரைவில் இவர்கள் திருமணம் நடக்கயிருக்கிறது.

சாந்தனு, கீர்த்தி நட்பு பல வருடங்களாக நீடிக்கிறது என்று காதல் விவகாரம் வெளியே தெ‌ரிந்த பிறகு கூறுகிறார்கள். கீர்த்தியின் அம்மா வைத்திருக்கும் நடனப்பள்ளிக்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். மானாடியதில் ஆரம்பித்த அவர்கள் காதல் இந்த நடனப்பள்ளியில் வேர்விட்டு கிளை பரப்பியதாக கூறப்படுகிறது.

இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் (வேறு வழி?). விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என அடித்துச் சொல்கிறார்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள்.

ஐயோ, காதலா? நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ் அவ்வளவுதான் என்று இருவரும் சொல்லக் கூடும். சிம்புவை காதலிப்பதாக கூறியதற்கு முதல்நாள்வரை, சிம்பு ஜஸ்ட் ப்ரெண்ட் என்றுதானே ஹன்சிகாவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனிவே... இருவருக்கும் நமது வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்