சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இயக்குனர் கே.பாக்யராஜ் தனது கதைகளையும், சீன்களையும் திருடி பல இயக்குனர்கள், அவர்களே யோசித்து வைத்தது போல், அவர்களுடைய படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதே போல சில மாதங்களுக்கு முன்பு எனது ஒரு படத்தின் கதையை எடுக்க அனுமதி கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன். ஆனால், அதே கதையை வைத்தே ஒரு படம் வெளியானது. வேண்டாம் என்று சொல்லியும் படமாக எடுத்தவர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை என தனது மன வேதனைகளை கொட்டித் தீர்த்துவிட்டார்.