மகேந்திரன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சிம்ரன்

திங்கள், 5 மே 2014 (18:36 IST)
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி போன்ற காலத்தால் அழியாத காவியங்களை தந்த இயக்குனர் மகேந்திரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்காக அவர் இளையராஜாவை சந்தித்தது நினைவிருக்கலாம்.
 
தற்போது மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது தெரிய வந்துள்ளது.
 
அவர்கள் வேறு யாருமில்லை பிரகாஷ்ராஜும், சிம்ரனும்தான். இவர்களுடன் முக்கியமான வேடம் ஒன்றில் பிரதாப்போத்தனும் நடிக்கிறார்.
 
இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.
 
ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்கயிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்