பாலுமகேந்திரா இயக்கத்தில் ப்‌ரியாமணி

சனி, 13 பிப்ரவரி 2010 (12:55 IST)
பாலுமகேந்திரா தனது அடுத்தப் படத்தை இந்த வருட இறுதியில் தொடங்கயிருக்கிறார். இதுவரையான பாலுமகேந்திரா படங்களிலிருந்து இந்தப் படம் வேறுபட்டிருக்கும் என்கிறார்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்கள். ஈழம் சார்ந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது பாலுமகேந்திராவின் நெடுநாள் கனவாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

இந்தப் படத்தின் பெயர் மற்றும் விவரங்கள் முடிவாகவில்லை. ஆனால் முக்கிய வேடத்தில் ப்‌ரியாமணி நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்தில் ப்‌ரியாமணி நடித்திருந்தார்.

இந்தப் புதிய படத்துக்கு புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்காக கோல்ட் மெடல் வாங்கிய அன்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இசை இளையராஜா. பாலுமகேந்திராவும் புனே திரைப்படக் கல்லூ‌ரியில் ஒளிப்பதிவு பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்