கத்தி படம் தனது மூத்த குடி என்ற கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், முருகதாஸிடம் இந்தக் கதையை இரண்டரை மணி நேரம் கூறினேன். கதையை கேட்டவர் இன்னும் மெருகேற்றிவிட்டு வரச் சொன்னார். கதையை மெருகேற்றும் நேரத்தில் அவர் என்னுடைய கதையை வைத்து கத்தியை எடுத்துள்ளார் என மீஞ்சூரைச் சேர்ந்த கோபி என்பவர் வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம். அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.