ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் சமீபத்தில் தொடங்கியது. சர்ச்சைகளின் நாயகியாக வலம்வந்த அஞ்சலிதான் படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவர். களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணத்தில் நடிக்காமல் சுராஜ் படத்தில் அஞ்சலியை நடிக்க அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் இருந்ததால் முதல்நாள் படப்பிடிப்பில் அஞ்சலி நடிப்பதைப் பார்க்க நிருபர்கள் குவிந்துவிட்டனர். படப்பிடிப்பு பிரேக்கின் போது அஞ்சலி பேட்டியும் தந்தார்.
அஞ்சலி, கேதரின் தெரேஸாவில் யார் முதல் ஹீரோயின், யார் இரண்டாவது ஹீரோயின்? கேதரின் நடிக்கிறார் என்றதும் இந்த கேள்வியும் வலுவடைந்துள்ளது.