அங்காடித்தெரு, நான் கடவுள், சிந்துசமவெளி, நீர்ப்பறவை, கடல் உள்பட பல படங்களுக்கு ஏற்கனவே ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஏழாம் உலகம் நாவலை அடிப்படையாக வைத்தே நான் கடவுள் படம் எடுக்கப்பட்டது. கடல் படத்தின் வசனத்துடன் கதை, திரைக்கதையிலும் ஜெயமோகன் பங்களிப்பு செலுத்தினார்.