நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி கௌரி ஷிண்டே இயக்கத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தார். படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அதன் பிறகு பல மொழிகளிலிருந்து நடிக்க அழைப்பு வந்தும் அவர் ஏற்கவில்லை. கணவர் போனி கபூரின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க நடிக்க அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சிம்புதேவனின் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கதைப்படி அவர் ராணியாகவும், விஜய் அவரை காப்பாற்றும் வீரனாகவும் நடிக்கயிருப்பதாக படயூனிட்டிலிருந்து தகவல் கசிந்துள்ளது.