சினிமா எடுப்பதற்காக நடத்தப்படும் கதை விவாதத்தை பார்த்திபன் படமாக்குகிறார். விவாதத்தில் அந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும், இப்படி காட்சிகள் வைத்தால் ரசிப்பார்கள் என்று கூறுவார்களில்லையா? அவர்கள் அப்படி விவாதிக்கும் விஷயங்களை அப்படியே திரையில் காட்சிகளாக கொண்டு வந்திருக்கிறார். ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் எனும் போது நடிகர் ஆர்யாவே திரையில் தோன்றி அந்தக் காட்சியில் நடிப்பார்.
இந்த புதுமையான திரைக்கதை காரணமாக பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடிக்கின்றனர். இசையை பொறுத்தவரை மொத்தம் 5 இசையமைப்பாளர்கள்.தமன், விஜய் ஆண்டனி, சரத், அல்போன்ஸ் ஜோசப், சத்யா. தமிழர்கள் மறந்து போன சிம்ரனை அழைத்து வந்து ஒரு பாடல் பாட வைத்துள்ளார். கணவன் மனைவியான ஜீ.வி.பிரகாஷும், சைந்தவியும் ஒரு பாடல் பாடியுள்ளனர். விளம்பரம், சினிமா என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவரும் சினேகாவையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளார்.