குணமடைய பிரார்த்தனை

செவ்வாய், 24 டிசம்பர் 2013 (16:09 IST)
வரும் 28ஆ‌ம் தேதி மலோசியாவில் நடக்கவிருக்கும் கிங் ஆப் கிங் என்னும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்காக, பிரசாத் ஸ்டுடியோவில் பல்வேறு இசை கலைஞர்களுடன் ஒத்திகை நடத்திக் கொண்டிருந்த இசைஞானி இளையராஜா திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் துடிக்க, அவரை உடனடியாக தனியார் மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்.
FILE

சிறப்பு மருத்துவ குழுவினர்கள் உதவியுடன் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார் இளையராஜா. இந்த செய்தி கேட்டு அவரது ரசிகர்களும், சினிமாவில் உள்ள சில பிரபலங்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு பெருமளவில் திரண்டு, இசைஞானி பூரண குணமடைய பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். தற்போது நலமுடன் இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்