கவலையில் சந்தானம்

வெள்ளி, 23 மே 2014 (16:16 IST)
நேற்று சினிமாவுக்கு வந்து இன்று ஹீரோவாகி விடவில்லை. இன்றைய ஹீரோவுக்குப் பின்னால், ஏகப்பட்ட உழைப்பு இருக்கிறது என்கிறார் நடிகர் சந்தானம். 
ஒரு படம் ஹீரோவாக நடித்தவுடன் சம்பளம் அதிகமாக கேட்கிறேன் என்று சிலர் கூறி வருகின்றனர் என்று தனது வருத்தத்தை கொட்டித் தீர்த்தார். அப்படி கேட்டதாக ஒரு இயக்குனரையோ, தயாரிப்பாளர்களையோ சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டுமென்று கேட்கிறார்களோ அதற்கேற்றபடிதான் நானும் சம்பளம் கேட்கிறேன். 
 
தற்போது ஓடிக் கொண்டிருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்குப் பிறகு ஹீரோவாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. அடுத்து, முருகான‌ந்த் இயக்கும் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 
 
மேலும், இனி தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்க மாட்டேன். எனக்கு பொறுத்தமான கதையாக இருந்தால் மட்டுமே ஹீரோவாக நடிப்பேன் என்கிறார்

வெப்துனியாவைப் படிக்கவும்