என்னை குற்றம் சொல்வதா? அமலா பால் ஆவேசம்

வியாழன், 1 மே 2014 (17:18 IST)
அமலா பால் விரைவில் திருமணம் செய்யப் போவதால் அவரை தெலுங்குப் படம் ஒன்றிலிருந்து நீக்கிவிட்டதாக தகவல். அதுபற்றி நமது தளத்திலும் எழுதியிருந்தோம். திருமணம் குறித்து அமலா பால் முன்னமே கூறவில்லை என்றும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியிருந்தது. இது அமலா பாலை ஆவேசப்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனம் மார்ச் முதல் மே வரையில் அமலா பாலிடம் 45 நாள்கள் கால்ஷீட் கேட்டிருந்தது. அமலா பாலும் அதற்கு சம்மதித்து பத்திரத்தில் ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் அந்த தேதிகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. அமலா பால் அவர்களை தொடர்பு கொண்ட போதும் நழுவுகிற பதிலாகவே கூறியிருக்கிறார்கள்.
 
அப்படி, தான் தந்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டு தன் மீதே பழிபோடுவதா என்று அமலா பாலுக்கு கோபம். மேலும், அவர்கள் கால்ஷீட் கேட்டது மார்ச் முதல் மே வரை. என்னுடைய திருமணம் நடக்கயிருப்பது ஜுனில். மே மாதத்தோட முடியக்கூடிய படத்துக்கு ஜுன் மாதம் நடக்கிற என்னுடைய திருமணம் குறித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் அமலா பால் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
படநிறுவனம் தங்கள் மீதுள்ள தவறை மறைக்க அமலா பாலின் மீது பழிபோடுவது இதன் மூலம் உறுதியாகிறது. எதற்கெடுத்தாலும் நடிகர்களின் மீது பாயும் சினிமா சங்கங்கள் இந்த பொய் புகாருக்கும், அமலா பாலின் கால்ஷீட்டை வீணடித்ததற்கும் குறிப்பிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா?

வெப்துனியாவைப் படிக்கவும்