பல வருடங்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்காக பாராட்டு மழையில் நனைந்தார் பார்த்திபன். பார்த்திபன்னாலே வித்தியாசம் என்பதை விழாக்களில், தரும் பரிசுகளிலும் காட்டியவர் முதல்முறையாக அந்த வித்தியாசத்தை படத்தில் காட்டியது இப்போதுதான். குருநாதர் பாக்யராஜ் முதல் பக்கிரிசாமிவரை பாராட்டதவர்கள் யாருமில்லை.
ஆனால் ஸ்பெஷல் பாராட்டு கிடைத்தது விஜய்யிடமிருந்து.
பொதுவாக மீடியா வழியாகவோ, போன் மூலமாகவோ பாராட்டை தெரிவிக்கும் விஜய், பார்த்திபனை மட்டும் நேரில் சந்தித்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.