கார்த்திக் சுப்பாராஜுக்கும், ஜிகர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ஏற்பட்ட கசமுசாவுக்கு முக்கிய காரணம் படத்தின் சில காட்சிகளை கதிரேசன் எடிட் செய்யச் சொன்னது. சென்சார் ஆட்சேபணை தெரிவித்த காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும், வரிச் சலுகை பெறலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் ஒரு கிரியேட்டராக கார்த்திக் சுப்பாராஜால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய விஜய் அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அது, படத்தை 2.30 மணி நேரத்துக்கு மேல் கண்டிப்பாக இழுக்காதீர்கள். படம் பார்க்கிற ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும்.