வானவராயன் வல்லவராயன் படத்தை தயாரித்த மகாலட்சுமி மூவிஸின் கே.எஸ்.மதுபாலா படத்தின் உரிமையை தருவதாகக் கூறி ஒரு கோடியே பத்து லட்சம் சோபனாவிடம் வாங்கியிருக்கிறார். சோபனாதான் செலவு செய்து பாடல்கள் வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் மதுபாலா படத்தின் உரிமையை வேறு சிலருக்கும் தந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து 25 லட்சங்கள் மதுபாலா சோபனாவுக்கு திருப்பித் தந்துள்ளார். மீதி 85 லட்சங்கள் தர வேண்டும். அதனை செட்டில் செய்யாமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்பது சோபனாவின் வாதம். மதுபாலா ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக என்னுடைய கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என சோபனா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.