இனி கவர்ச்சியான பி.எஸ்.என்.எல். விளம்பரம்!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (18:22 IST)
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். விளம்பர மாடலாக இதுவரை இருந்து வந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. ஓராண்டு விளம்பர மாடலாக பல லட்சங்கள் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வருகிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் தன்னையே ஒப்பந்தம் செய்வார் என்று எண்ணிக்கொண்டு இருந்த ஜிந்தாவுக்கு பெருத்த ஏமாற்றம். ஓராண்டு ஒப்பந்தத்தோடு நீ போதும் என்று சொல்லிவிட்டது பி.எஸ்.என்.எல்.

அவருக்கு பதிலாக தற்போது மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் 'ஓம் சாந்தி ஓம்' பட நாயகி தீபிகா படுகோ‌ன். மிகவும் கவர்ச்சியான தீபிகாவை மாடலாக்க முதலில் யோசித்தது பி.எஸ்.என்.எல். ஆனாலும் ஆடையில் அதை பார்த்துக் கொள்ளலாம். நாகரீகம் கெடாமல், இந்திய கலாட்சாரப்படி காட்டிவிடலாம் என்று முடிவு செய்ததோடு, பி.எஸ்.என்.எல். விளம்பர மாடலாக இருந்தும் ப்ரீத்தி ஜிந்தா தன் வீட்டிற்கு பி.எஸ்.என்.எல். கனெக்சன் வாங்கவில்லையே என்ற கடுப்பும் அதிகாரிகளுக்கு இருந்திருக்கிறது.

அதுவும் ஒன்று சேரத்தான் ஜிந்தாவை மாற்றியிருக்கிறார்கள். இந்த விஷயம் மிகவும் லேட்டாகத் தெரியவர இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு எதிலெல்லாம் 'ஆப்பு' வருமென்று புரியவே மாட்டேன் என்று புலம்பி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்