ஆயா வடை சுட்ட கதை

வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (13:07 IST)
ஆயா வடை சுட்ட கதையை கேட்காமல் சோறு தின்ற குழந்தைகள் தமிழ்நாட்டில் குறைவு. ஆயா வடை சுட்ட கதையை சினிமாவில் கவுண்டமணி பிரித்து மேய்ந்திருப்பார். கொஞ்சம் மறைகழன்ற ஊர்வசியை கவுண்டரும், பிரசாந்தும் சமாளிக்க வேண்டும். ஊர்வசியை சமாதானப்படுத்த கவுண்டர் ஆயா வடை சுட்டதையும் காக்கா அதை திருடிச் சென்றதையும், நரி தந்திரமாக காக்காவைப் பாடச் சொல்லி அதனை தட்டிப் பறித்ததையும் சொல்வார்.
FILE

கதையை கேட்டதும் பகபகவென சிரிக்க ஆரம்பிப்பார் ஊர்வசி. கவுண்டருக்கு ஆயிரம் வாட்ஸ் தாக்கிய அதிர்ச்சி. ஏன்... என்னாச்சி...?

ஊர்வசி சொல்வார். பைத்தியம்... எங்காவது நரி பேசுமா... காக்கா பாடுமா பைத்தியம் என்று இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பிப்பார்.
FILE

கவுண்டருக்கோ பேரதிர்ச்சி. என்னது நான் பைத்தியமா. இந்த கதையை சொல்லித்தானே தமிழ்நாட்ல குழந்தைங்களுக்கு சோறு ஊட்றாங்க. அப்போ அவங்க எல்லாமே பைத்தியமா?

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். அப்பேர்ப்பட்ட ஆயா வடை சுட்ட கதையை இந்த காலத்துக்கு ஏற்ப காமெடி கலந்து சொல்ல வருகிறது ஒரு டீம். இதில் 100 குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட்தான் கதைக்களம். இந்த குடும்பங்களில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பது பரபரப்பான திரைக்கதை.

புதுமுகங்களான சுபர்ணா, அவிடேஜ் நடிக்கின்றனர் பனிந்ரா படத்தை இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்