அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ள காணிக்கு, அடுத்ததாக உள்ள காணியில் வசித்து வருகின்ற இந்தப் பெண்மணி,இரு காணிகளை பிரிக்கும் முட்கம்பி வேலியின் மறுபக்கத்தில் இருக்கும் வேப்பமரக் கன்றில், வேப்பங்கொழுந்தைப் பறிப்பதற்காக வேலியின் முட்கம்பியில் சாய்ந்தபோது, அந்தக் கம்பியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரண வீட்டிற்கு வருகை தந்திருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிமலன் மற்றும் வடமகாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் கையளித்துள்ளனர்.