உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் ஜெர்மனியை வெளியேற்றிய தென்கொரியா

வியாழன், 28 ஜூன் 2018 (06:51 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியனான ஜெர்மனியை தென்கொரியா அதிரடியாக தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு செல்லவிடமால் வெளியேற்றியுள்ளது. இதனால் ஜெர்மனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய முக்கிய ஆட்டட்தில்  தென்கொரியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்குக் செல்ல முடியும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி இந்த போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் தென்கொரியா அணி ஜெர்மனிக்கு கடுமையான சவாலாக இருந்ததால் போட்டியின் 90 நிமிடம் வரை அதாவது போட்டியின் முடிவு வரை  இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடுவர் 6 நிமிடங்கள் கூடுதலாக விளையாட அனுமதியளித்தார். இந்த ஆறே நிமிடங்களில் தென்கொரிய அணி 2 கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்