மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி.. சாம்பியன் பட்டம் வென்றது..!

Siva

ஞாயிறு, 28 ஜூலை 2024 (18:31 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெறும் பெற்று வந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடிய நிலையில் இரண்டாவது ஓவரிலே ஒரு விக்கெட் விழுந்தாலும் அதன் பிறகு கேப்டன் அத்தப்பத்து, ஹர்ஷிதா ஆகிய இருவரும் சேர்ந்து அபாரமாக விளையாடினார்.

இதனை அடுத்து 18.4 இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றதோடு ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இதனை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்