கொரோனா பரவலால் முடங்கிய கிரிக்கெட் போட்டிகள்! இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா?

வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:01 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படலாம் என்ற கருத்துகளுக்கு பிசிசிஐ பொருளாளர் பதிலளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளதால் மக்களின் வருமானத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரும் ரத்தாகும் சூழலில் கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ‘அந்த மாதிரி முடிவுகள் எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை. இதுமாதிரியான சூழலுக்குப் பிறகு என்னவிதமான முடிவு எடுத்தாலும் அது அனைவரின் நலத்தையும் மனத்தில் கொண்டே எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்