இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் என்ற மகுடத்தை வென்ற பிறகு உற்சாகமாக விளையாடியுள்ளேன். பல இளம் வீரர்கள் ஆட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகின்றனர். மேலும் என்னுடைய ஓய்வு முடிவு குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. டென்னிசில் பெற்ற நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க போதிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.