இந்த முடிவு தவறானதா? என்று பிஃபாவின் தலைவர் ஸெப் பிளாட்டரிடம் சுவிஸ் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியது. ஆம் நிச்சயமாக என்று அதற்குப் பதிலளித்த அவர் எல்லோரும் வாழ்க்கையில் தவறு இழைத்திருக்கிறார்கள் என்று கூறினார். அதே நேரம் வளைகுடா நாடான கத்தார் 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகப் போட்டிகளை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் விமர்சனங்களை ஸெப் பிளாட்டா நிராகரித்தார்.