முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகையில் ரசிகர்கள் பாட்டில்களை வீசி கலாட்டா செய்தனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், “என்ன ஒரு அவமானம்! நாங்கள் வெற்றிபெறும் பொழுது எல்லாம் நல்லபடியாக இருக்கிறது. நாங்கள் தோல்வியடையும் பொழுது நீங்கள் இப்படியா நடந்துகொள்வது?