இந்நிலையில், இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், ”2013ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. எதுவாயினும், இரண்டு ஆண்டுகள் நடந்து முடிந்த அந்த தொடர்கள் முழுவதிற்கும், நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளதான் வேண்டும்.
நாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறிச் சென்று, சவாலுக்குத் தயாராக இருந்தோம் என்பது அழகாக தெரிந்தது. நாங்கள் இப்போது கற்றுக்கொண்டுள்ளோம். இனிமேல், நாங்கள் எந்த மன்னிப்பையும் கோர முடியாது. தற்போதுள்ள நிலையில், நாங்கள் போதுமான அளவு அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம்.