மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதியில் டாஸ் வென்ற இந்தியா

வெள்ளி, 27 ஜனவரி 2023 (13:20 IST)
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதியில் டாஸ் வென்ற இந்தியா
19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த தொடரில் இன்று அரை இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. 
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய அணி கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்று உள்ளது என்பதும் நியூசிலாந்து அணி கடந்த ஐந்து போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிய இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரை இறுதி போட்டி நடைபெறும் என்பதும், இந்த இரு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டியில் வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்