சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை பொறுத்துதான் புதிய போட்டிகள் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால், கராத்தே, போர்ட் ஸ்கேட்டிங், மலையேற்றம் மற்றும் அலைச்சறுக்கு ஆகிய 5 விளையாட்டுகளை புதிதாக சேர்க்கும் படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழு, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் சிபாரிசு செய்துள்ளது.