ஐபிஎல் 2022: முதல் பிளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக்கு தகுதி பெறும் அணி எது?

செவ்வாய், 24 மே 2022 (12:34 IST)
ஐபிஎல் 2022: முதல் பிளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக்கு தகுதி பெறும் அணி எது?
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த இன்று முதல் பிளே ஆஃப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய முதல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணியின் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதுதும் அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்