ஆனாலும் நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஐபிஎல் போட்டியில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 3ஆயிரத்து 500 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
3ஆவது இடத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் 111 ஆட்டங்களில் விளையாடி 3,015 ரன்களும், 4ஆவது இடத்தில் பெங்களூரு அணி வீரர் கிறிஸ் கெய்ல் 74 போட்டிகளில் விளையாடி 2927 ரன்களும் குவித்துள்ளனர்.