பாகிஸ்தான் - இலங்கை ஆசிய கோப்பை போட்டி: மழை பெய்ததால் மைதானத்தில் பரபரப்பு..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:56 IST)
இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மைதானத்தில் மழை பெய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
 
ஏற்கனவே இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணிய இறுதி போட்டியில் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மூன்று முப்பது மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில் மலை காரணமாக இன்னும் டாஸ் போடாமல் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய போட்டி நடைபெறுமா? அல்லது ரிசர்வ் தினத்திற்கு ஒத்திவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்