இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஸ்குவாஷ் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றதை அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். இந்த சாதனைக்காக தமிழக மக்கள் சார்பில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசிடம் இருந்து இத்தொகையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்குக்கும், நீங்கள் பெற்ற வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்துக்கும் தமிழகத்திற்கும் எதிர்காலத்தில் மேலும் பல புகழை நீங்கள் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், என கூறப்பட்டுள்ளது.