சொந்த மண்ணில் வீசில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த சிராஜ்!

ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (13:27 IST)
சொந்த மண்ணில் வீசில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த சிராஜ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலாவது இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது இன்று காலை மளமளவென 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தற்போது 6 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் இந்திய அணியில் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பதும் அவர் இன்றைய 39வது ஓவரை வீச வந்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் சொந்த மண்ணில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரை இன்று வீசினார். அதில் முதல் பந்திலேயே அவருக்கு விக்கெட் கிடைத்தது. ஒலி போப் என்பவரை அவர் வீழ்த்தினார். இதனையடுத்து சொந்த மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே அவர் முதல் விக்கெட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்