நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஸ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்!

செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:02 IST)
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ஹைதராபாதிலும் இரண்டாவது போட்டி ராஜ்பூர் மற்றும் மூன்றாவது போட்டி இந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் ரஜத் பட்டிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்