இந்நிலையில், ஆட்டத்தின் 23.3 ஓவரில் 107 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது களத்தில் தவான் 74 ரன்னிலும், முரளி விஜய் 33 ரன்னிலும் எடுத்திருந்தனர்.
பின்னர் களமிறங்கி தொடர்ந்து ஆடிய இந்திய அணி வீரர் முரளி விஜய் 98 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்தார். அதனை தொடர்ந்து, ஷிகர் தவான் 101 பந்துகளில் 16 பவுண்டரிகள் உட்பட 100 ரன்கள் குவித்தார்.