நான் விலை உயர்ந்தவன்; என்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது: ஷேன் வார்னே பதிலடி!!

வியாழன், 8 ஜூன் 2017 (16:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள அனில் கும்ளேவின் பதிவி காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பயிர்ச்சியாளரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 
 
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்ட நிலையில், அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் விண்ணப்பித்தனர்.
 
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே இதற்கு விண்ணப்பித்திருக்கலாம் என செய்திகள் வெளியாயின.
 
ஆனால் இந்த தகவலை மறுத்துள்ளார் ஷேன் வார்னே. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒரு போதும் சிந்திக்கவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 
மேலும், நான் மிகவும் விலை உயர்ந்தவன். என்னை அவர்களால் (பிசிசிஐ) விலைக்கு வாங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்