அக், 26 நேற்று இரவு சென்சோ மேயிவா வீட்டில் இருந்த போது இரண்டு பேர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம நபர்கள் கேப்டன் சென்சோவிடம் மொபைல் போனை தருமாறு மிரட்டியுள்ளனர்.
சென்சோ மேயிவா மொபைல் போனை தர மறுத்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். உடனே சென்சோ மேயிவாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.